கோவை ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இயக்குநர் குழுக் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையருமான பிரகாஷ் தலைமையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான இயக்குநர் குழுக் கூட்டம் இன்று (21.10.2016) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளுடன் செயலாக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெலலிதா அறிவித்த சிறப்பு அறிவிப்பு திட்டங்களான  சங்கனூர்பள்ளம் சீரமைப்புப்பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், வெள்ளளுர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் குறித்தும், மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடங்களை, அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல் போன்ற திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

இதற்கு முன்னர் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மற்றும் டவுன் ஹால் பெரிய கடை வீதி ஆகிய மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஆய்வு செய்தார். மேலும், சங்கனூர்பள்ளம் கால்வாய் சீரமைப்புப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களான மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு டெக்ஸ்டூல் பிரிட்ஜ், அவினாசி ரோடு மற்றும் திருச்சி ரோடு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சக ஒருங்கிணைந்த நிதி கோட்ட இயக்குநர் மஜும்தார், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...