வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் - ஓட்டுநர்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் அங்குள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் நிறுத்த ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்ட வால்பாறை பகுதிகள் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவு பயணிகள் வரவு அதிகரிக்கும். பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வால்பாறையில் மொத்தம் 80 ஆட்டோக்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகை வாகனங்களை நிறுத்த தனியாக ஸ்டேண்டுகள் இல்லாததால் சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் பொதுக்கூட்டங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறி சில நேரங்களில் சாலையில் உள்ள ஆட்டோ மற்றும் கார்களை அகற்ற காவல் துறையினர் நிர்பந்தம் செய்வதால் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்க கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக நகராட்சியின் முக்கிய பகுதியான பேருந்து நிலையங்களுக்கு அருகே அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக வால்பாறையை சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து வருவதும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு பின்னடைவாக தான் பார்க்க முடிகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...