பாதுகாப்பு இல்லாத கழிப்பிடம் மக்கள் அவதி

கோவை பூசாரிபாளையம் பகுதி அருகே அச்சுறுத்தும் நிலையில் உள்ள பெண்கள் கழிப்பிடத்தை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை, பூசாரிபாளையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது, ஆனால் போதிய மறைப்புகள் இல்லாததாலும், அதை ஒட்டியே ஆண்கள் கழிப்பிடம் கட்டப்பட்ட வருவதால் பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தகரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் மீது வேளாண் பல்கலை கழகத்தை ஒட்டியுள்ள மரம் உடைந்து விழுந்துள்ளது, அதுவும் இது வரை அகற்றபடவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

அதேபோல் அப்பகுதி அருகே மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள பொதுகழிப்பிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சில நபர்கள் பத்து வயது சிறுவனை கழிப்பிடத்திற்கு பின்னால் அழைத்து சென்று கட்டி போட்டு சராமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போதிய பாதுக்காப்பு இல்லாத நிலையில் கழிப்பிடங்கள் உள்ளதால் அப்பகுதி பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...