கோயமுத்தூர் ரைபிள் கிளப்பில் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி

1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "தி கோயமுத்தூர் ரைபிள் கிளப்" தொடர்ந்து துப்பாக்கி சுடும் திறனுள்ளவர்களை பயிற்றுவித்து அவர்களை உலக அளவில் புகழ் பெற வைப்பதில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. கோவை மாநகரக் காவலர் ஆணையரை தலைவராகக் கொண்டு இந்த கிளப்பானது அவிநாசி சாலையில் உள்ள காவல் பயிற்சி பள்ளி மைதானத்தில் அமைந்துள்ளது.

நவீனரகத் துப்பாக்கி உட்பட அனைத்து பயிற்சி படைக்கலன்களைக் கொண்டும், திறமையான பயிற்சியாளர்களை கொண்டும் இயங்கிவரும் கிளப்பின் உறுப்பினர்கள் உலகளாவிய துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை தொடர்ந்து வென்று வருகிறது. இந்த கிளப்பின் உட்கட்ட அமைப்பினை மேம்படுத்துவதுடன், நவீன வசதிகளையும் ஏற்படுத்தி இந்தியாவிலேயே ஒரு முன்பதிரியான ரைபிள் கிளப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கி சுடுவது ஈடுபடும் ஆர்வமும் உள்ள புதிய உறுப்பினர்களை இக்கிளப்பில் உறுப்பினர்களாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துத்திருப்பவர்கள் மட்டுமின்றி, துப்பாக்கி இல்லாத ஆர்வமுள்ள பிறரும் இந்தக் கிளப்பில் உறுப்பினராக சேர வாய்ப்புள்ளது. அவ்வாறு சேருபவர்கள் ரைபிள் கிளப் மூலமாக மாநில, தேசிய மற்றும் உலக அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மேலும் தற்க்காப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் ரைபிள் கிளப்பில் உறுப்பினர் ஆவதன் மூலம் இக்கிளப்பின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள இம்மாதிரியான ரைபிள் கிளப்களில் துப்பாக்கி சுடுவதற்கான பயிச்சியினை பெறவும் வாய்ப்புள்ளது. 

எனவே, புதிய உறுப்பினர்களாக சேர ஆர்வமுள்ளவர்கள் மாநகர காவல் அலுவலகத்தை அணுகி புதிய உறுப்பினருக்கான விண்ணப்பித்தினை பெற்றுக்கொள்ளுமாறும் அதனை பூர்த்தி செய்து வருகின்ற 20.11.2016ம் தேதிக்குள் "மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தலைவர், 'தி கோயமுத்தூர் ரைபிள் கிளப்' காவல் ஆணையாளர் அலுவலகம், ஹசூர் ரோடு, கோயமுத்தூர்-18." என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...