ஐஏஎஸ் அகாடமி தீ விபத்தில் பாதித்த மாணவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர்

கோயம்புத்தூர், காந்திப்பார்கில் உள்ள கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி வளாகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் திடீர் என ஏற்பட்ட நச்சுப்புகையினால் அங்கு படித்துக்கொண்டிருந்த காயத்ரி, அரங்கநாதன், விஜயலட்சுமி, முத்துமணிகண்டராஜா, கிரிராஜன் ஆகிய மாணவர்களுக்கு  திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்விபத்தில் சக்திவேல் என்ற மாணவன் மருத்துமனை அழைத்துசெல்லும் வழியிலேயே மரணமடைந்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே அர்ச்சுனன், மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ, துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...