கோவையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - படைவீரர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (21.10.2016) வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவது தொடர்பாக அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு அதிவிரைவுபடை, கடல் காவல் படை, 110- படைபிரிவு அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பேசிகையில்:-  

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு அலுவலர்களை சுழற்ச்சி முறையில் அமர்த்தப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. இதுவரையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் இரண்டாம் கட்ட ஆய்வுக்கூட்டங்களும், கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது. அதுபோலவே, மழைக் காலங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சிரமங்களையும், அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு அதிவிரைவுபடை, கடல் காவல் படை, 110- படைபிரிவு ஆகிய குழுக்களும் இணைந்து மீட்பு பணிகளில் செயல்பட வேண்டும் என்றும் மீட்பு பணி நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவசர காலங்களில் மீட்பு பணிக்கென துரித நடவடிக்கை குழுக்களை ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், காவல் துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா, அதிவிரைவுப்படை துணை கமாண்டன்ட் ஜாபர், மத்திய பாதுகாப்பு அதிவிரைவுப்படை கமாண்டன்ட் சஞ்சய்சிங், இரண்டாம் நிலை அலுவலர் ஜி.பி.யுனியன், கடல்காவல்படை கேப்டன் அமுதகுமார், 110 – படைபிரிவு கேப்டன் சந்தீப் ஜாதவ், மாவட்ட கூடுதல் காவல் கண்கானிப்பாளர் முத்தரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...