மீண்டும் விழுந்த காட்டு யானை- ஏமாற்றத்தில் வனத்துறை

கோவையை அடுத்த பெரிய தடாகம் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் கோளாறு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் பொக்லைன் உதவியுடன் அந்த யானையை தூக்கி நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காததால், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்க முயற்சி மேற்கொண்டனர். 



அப்போது யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 4 யானைகள் கொண்ட கூட்டம் வந்ததால் சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக மருத்துவக் குழுவினர் யானைக்கு தண்ணீரும், பழங்களும் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். 

இதில், யானையில் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை நிற்க வைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் எழுந்து நின்ற யானை, வனத்துறையினர் வைத்த தண்ணீரை குடித்துவிட்டு காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றது.

இந்நிலையில், மீண்டும் வெள்ளியன்று அந்த பெண் காட்டு யானை அப்பகுதியிலேயே படுத்துக்கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற வனத்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவையில், கடந்த சில நாட்களாக யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இச்சம்பவம் கால்நடை ஆர்வலர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...