மீண்டும் விழுந்த காட்டு யானை- ஏமாற்றத்தில் வனத்துறை

கோவையை அடுத்த பெரிய தடாகம் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் கோளாறு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் பொக்லைன் உதவியுடன் அந்த யானையை தூக்கி நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காததால், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்க முயற்சி மேற்கொண்டனர். 



அப்போது யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 4 யானைகள் கொண்ட கூட்டம் வந்ததால் சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக மருத்துவக் குழுவினர் யானைக்கு தண்ணீரும், பழங்களும் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். 

இதில், யானையில் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை நிற்க வைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் எழுந்து நின்ற யானை, வனத்துறையினர் வைத்த தண்ணீரை குடித்துவிட்டு காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றது.

இந்நிலையில், மீண்டும் வெள்ளியன்று அந்த பெண் காட்டு யானை அப்பகுதியிலேயே படுத்துக்கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற வனத்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவையில், கடந்த சில நாட்களாக யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இச்சம்பவம் கால்நடை ஆர்வலர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...