பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி பராமரிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

டெல்லி: பிசிசிஐ கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ள, லோதா கமிட்டியே ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல்வேறு முக்கிய பரிந்துரைகளை வழங்கியது. அதை அமல்படுத்த பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது

இந்த உத்தரவை இன்னமும் பிசிசிஐ அமல்படுத்தாமல் இழுத்தடிக்கும் நிலையில் அதுகுறித்து லோதா கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதை விசாரித்துவரும் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒரு பைசாவை கூட தரக்கூடாது என்றும், பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி ஆடிட்டர்களை நியமித்து கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீடியாக்களுக்கு வழங்கப்படும் ஒபந்தம் உள்ளிட்ட பல்வேறு நிதி விவகாரங்களை லோதா கமிட்டியே இனி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...