பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி பராமரிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

டெல்லி: பிசிசிஐ கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ள, லோதா கமிட்டியே ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல்வேறு முக்கிய பரிந்துரைகளை வழங்கியது. அதை அமல்படுத்த பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது

இந்த உத்தரவை இன்னமும் பிசிசிஐ அமல்படுத்தாமல் இழுத்தடிக்கும் நிலையில் அதுகுறித்து லோதா கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதை விசாரித்துவரும் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒரு பைசாவை கூட தரக்கூடாது என்றும், பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி ஆடிட்டர்களை நியமித்து கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீடியாக்களுக்கு வழங்கப்படும் ஒபந்தம் உள்ளிட்ட பல்வேறு நிதி விவகாரங்களை லோதா கமிட்டியே இனி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...