மனைவியை கத்தியால் குத்திய கணவர் - போலீஸ் விசாரணை

கோவை, கோவில் மேடு பகுதி, ஜமீதர் வீதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி ஷேமலதா (37). இவர்களுக்கு இடையே கடந்த 12 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்று 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே, கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடின் காரணமாக தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை விஓசி நகர் பகுதியில் ஷேமலதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சக்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு ஷேமலதாவை கண்மூடித் தனமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தலைமறைவானார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷேமலதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர் தலைமறைவான சக்தியின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...