இந்து பிரமுகர் கொலை வழக்கு: மூவர் மீது குண்டர் சட்டம்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது இறுதி ஊர்வலத்தின் போது கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. அப்போது, பேருந்துகள், பொதுமக்களின் வாகனம், காவல்துறை வாகனம் மற்றும் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக 800-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களில் கார்த்திக், பிரவீன்குமார், பிரதீப்குமார் ஆகிய மூன்று பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியரிடம் துடியலூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். 

இதன்பேரில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்களை துடியலூர் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை வேலூர் சிறையில் உள்ள கார்த்திக் மற்றும் திருச்சி சிறையில் உள்ள பிரவீன்குமார், பிரதீப்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...