காவிரி விவகாரம்: கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதைக் கண்டித்தும் தமிழகத்தில் அதிமுக, பாஜக-வைத் தவிர பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் கடந்த சில நாட்களாக ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் வெள்ளியன்று (இன்று) கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





இதுகுறித்து, போராட்டத்தில் பங்கேற்ற வீரத்தமிழர் முன்னணியின் மண்டல பொருளாளர் அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்திற்கு காவிரி நீரை விடக்கூடாது என்பதில் கர்நாடக அரசை விட மத்திய பாஜக அரசு மும்முரமாக உள்ளது. கடந்த 2007ல் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவிட அனுமதியில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. நடுநிலையாக செயல்படுவதாகக் கூறி உறுதிமொழியேற்ற மத்திய அமைச்சர்கள் தற்போது கர்நாடகம் பக்கம் சாய்ந்து விட்டனர். 





உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு அலுவலகங்களை பூட்டு போட்டும், வரி கொடுக்காத போராட்டமும் நடத்துவோம்'' என்று அவர் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 54 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.





Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...