தொடர்சிகிச்சைக்குப் பின் வனத்திற்குள் சென்ற பெண் யானை

பெரிய தடாகம் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை மாவட்டம் பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த யானைக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதனிடையே, அப்பகுதியில் 4 காட்டு யானைகள் வந்ததால், சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, இரண்டாவது நாளாக யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து தண்ணீரும், பழங்களையும் வழங்கி வந்தனர். 

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப்பின் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த பெண் யானையை நிற்க வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் எழுந்து நின்ற யானை மீண்டும் வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...