அதிபர் தேர்தல் விவாதம்: ஹிலாரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி


லாஸ் வேகஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது விவாதத்திலும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்தபின், அதன் முடிவை ஏற்பது குறித்து, டிரம்ப் கூறிய கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம், 2017 ஜனவரி, 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அதையடுத்து, அமெரிக்காவின், 45வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர், 8ல் நடக்க உள்ளது.

நேரடி விவாதம்:

இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 68; குடியரசு கட்சி சார்பில், பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70, போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலையொட்டி, இரு வேட்பாளர்களுக்கும் இடையே நேரடி விவாதம் நடத்தப்பட்டது. முதல் இரண்டு விவாதத்திலும், ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில், மூன்றாவது விவாதம், லாஸ் வேகஸ் நகரில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. பல்வேறு விஷயங்களில், அதிபரானால் தங்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த விவாதத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில், டிரம்பை விட, ஹிலாரிக்கு, 13 சதவீத கூடுதல் ஓட்டுகள் கிடைத்தன.

கூடுதல் ஓட்டுகள்:

இந்த விவாதத்தில் ஹிலாரி சிறப்பாக செயல்பட்டதாக, 52 சதவீதம் பேரும், டிரம்புக்கு ஆதரவாக, 39 சதவீதம் பேரும் ஓட்டளித்திருந்தனர். இதன் மூலம், மூன்று விவாதங்களிலும், டிரம்பை விட, ஹிலாரி கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளார். முன்னதாக நடந்த விவாதங்களில், டிரம்பை விட, நியூயார்க் நகரில், 35 சதவீதம்; செயின்ட் லுாயிஸில், 23 சதவீதம் கூடுதல் ஓட்டுகளை ஹிலாரி பெற்றார். இதற்கிடையே, 'பிரெய்ட்பார்ட்' என்ற அமைப்பு நடத்திய, மற்றொரு, 'ஆன்லைன்' கருத்துக் கணிப்பில், ஹிலாரிக்கு, 59 சதவீதமும், டிரம்புக்கு, 40 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. பிரெய்ட்பார்ட் அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் பானன், டிரம்பின் பிரசார குழுவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று விவாதங்களும் முடிந்த நிலையில், தங்களுக்கே வெற்றி என, இரு தரப்பும் கூறி வருகின்றன.

'தேர்தல் முடிவை ஏற்பது குறித்து பின்னர் முடிவு':

லாஸ் வேகஸில் நடந்த, 90 நிமிட விவாதத்தின் போது, 'அதிபர் தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் அதை ஏற்பீர்களா?' என, டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர், ''இது குறித்து இப்போது எதையும் கூற விரும்பவில்லை. உங்களையெல்லாம் சஸ்பென்சில் வைத்திருக்க விரும்புகிறேன்; தேர்தல் முடிந்ததும் கூறுகிறேன்,'' என்றார். டிரம்பின் இந்த கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக, அமெரிக்க தேர்தலில், தோல்வி அடையும் வேட்பாளர், அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஆதரவு தெரிவிப்பார். ஆனால், இந்த தேர்தலுக்கான நடைமுறைகள் துவங்கியதில் இருந்து, தில்லுமுல்லு நடந்து வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். பத்திரிகைகள் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், உளவு அமைப்பான, எப்.பி.ஐ., ஹிலாரிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அடுக்கடுக்காக பல புகார்களை டிரம்ப் கூறி வந்துள்ளார். அதனால் தேர்தல் முடிவை டிரம்ப் நிராகரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.டிரம்பின் இந்தக் கருத்துக்கு, விவாதத்தின் போது, ஹிலாரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ''நம் ஜனநாயகத்துக்கு அவமரியாதை செய்து விட்டார்,'' என, ஹிலாரி கூறினார்.டிரம்பின் பேச்சுக்கு, பல்வேறு பத்திரிகைகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...