உக்கிரமான சண்டை காரணமாக மொசூல் நகரில் இருந்து 900 பேர் தப்பி ஓட்டம்

ஈராக் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று மொசூல். இந்த நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது. அவர்களிடம் இருந்து இந்த நகரத்தை மீட்பதற்காக கடந்த திங்கட்கிழமை முதல் அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் ஈராக் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன.

இதன் காரணமாக அந்த நகரத்தில் உக்கிரமான சண்டை மூண்டுள்ளது.

அந்த நகரத்தில் இருந்து சுமார் 900 பொதுமக்கள் தப்பி, சிரியாவுக்குள் நுழைந்து விட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறுகிறது. அப்படி சிரியாவில் நுழைந்தவர்கள், அங்கு அகதிகள் முகாம்களில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மொசூல் நகரில் 15 லட்சம் மக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வது முக்கியம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே மொசூல் நகரில் இருந்து மேலும் பொதுமக்கள் தப்பி ஓட முடியாதபடிக்கு அவர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தடுப்பதாகவும், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்த முயல்வதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...