உக்கிரமான சண்டை காரணமாக மொசூல் நகரில் இருந்து 900 பேர் தப்பி ஓட்டம்

ஈராக் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று மொசூல். இந்த நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது. அவர்களிடம் இருந்து இந்த நகரத்தை மீட்பதற்காக கடந்த திங்கட்கிழமை முதல் அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் ஈராக் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன.

இதன் காரணமாக அந்த நகரத்தில் உக்கிரமான சண்டை மூண்டுள்ளது.

அந்த நகரத்தில் இருந்து சுமார் 900 பொதுமக்கள் தப்பி, சிரியாவுக்குள் நுழைந்து விட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறுகிறது. அப்படி சிரியாவில் நுழைந்தவர்கள், அங்கு அகதிகள் முகாம்களில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மொசூல் நகரில் 15 லட்சம் மக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வது முக்கியம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே மொசூல் நகரில் இருந்து மேலும் பொதுமக்கள் தப்பி ஓட முடியாதபடிக்கு அவர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தடுப்பதாகவும், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்த முயல்வதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...