கத்தியைக் காட்டி செல்போன் திருட்டு - ஒருவர் கைது

பீளமேடு பகுதியில் வீட்டில் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி செல் போன் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மேத்திவ். இவரது மகன் ஜஸ்டின் (19). கடந்த செவ்வாயன்று முகவரி விசாரிப்பதுபோல் இவரது வீட்டிற்கு வந்த மூன்று வாலிபர்கள் ஜஸ்டின் தனியாக இருந்ததை அறிந்து கத்தியைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வீட்டில் இருந்த 3 செல்போன்களை அந்த வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கோவை என்.எச். சாலை பகுதியைச் சேர்ந்த ரத்துல், ரோஷன், குட்டி ஆகிய மூவரும் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ரோஷனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரத்துல் மற்றும் குட்டியை தேடி வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...