பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்


கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட அனைத்து ஜாமத்களின் ஒருங்கிணைபாளர் இனாயத்துல்லாஹ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்:-

பாஜக அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டம் என்பது, முஸ்லீம்களின் தனி நபர் சட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும், அவரது மத நெறிகளை பின்பற்றி வாழ உரிமை உண்டு, அதன்படி, முஸ்லீம்களுக்கு சரியத்து சட்டம் உள்ளது. இந்த சட்டமானது குர்-ஆனின் நெறிகளுக்கும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டது. தற்போது கொண்டுவரும் பொது சிவில் சட்டத்தால் முஸ்லீம்களின் கலாச்சாரம் மற்றும் நெறிகள் முடக்கப்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் படி, முஸ்லீம்கள் அனைவரும் பொது சிவில் சட்டத்தை எதிர்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை கைய்யெழுத்து இயக்கத்தை கோவை மாவட்டம் முழுவதும் நடத்த தீர்மானித்துள்ளோம். அனைவரும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள 135 மசூதிகளிலும் நாளை கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...