ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-சீன கூட்டு ராணுவப் பயிற்சி

புதுடில்லி: இந்திய-சீன கூட்டு ராணுவப் பயிற்சி ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்றது.

கூட்டு ராணுவப் பயிற்சி:

இதுகுறித்து இந்திய ராணுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா-சீனா இடையேயான முதலாவது கூட்டு ராணுவ பயிற்சி, கடந்த பிப்.,6ல் சீனாவின் கிழக்கு லடாக்கின் ஹட் பகுதியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்தியாவில், ஜம்மு-காஷ்மீரில் நேற்று கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது.

இயற்கை பேரழிவுகளில்:

இதில் எல்லையோர கிராமங்களில் இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது உதவிகள் செய்வதற்கு இரு நாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு இந்திய வீரர்களுக்கு பிரிகேடியர் ஆர்.எஸ்.ராமனும், சீனப் படைக்கு சீனியர் கர்னல் பன் ஜன்னும் தலைமை தாங்கினர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவில் விரிசல்:

அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர்வது, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்களில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இக்கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...