கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், கார்ப்ரேட் சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதாகவும், சட்டவிரோதமாக ஈஷா மையத்தில் நடைபெரும் புகார்கள் குறித்து இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பொய்யான புகாரின் பேரில் சமூக ஆர்வலர் சிவாவை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக பொய்வழக்கை திரும்பப்பெற்று விடுதலை செய்ய வேண்டும், மேலும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஜக்கிவாசுதேவை கைது செய்ய வேண்டும் என உரையாற்றினர். முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...