கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக ஆர்வலர் சிவாவை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், கார்ப்ரேட் சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக கோவை மாவட்ட காவல்துறையினர் செயல்படுவதாகவும், சட்டவிரோதமாக ஈஷா மையத்தில் நடைபெரும் புகார்கள் குறித்து இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பொய்யான புகாரின் பேரில் சமூக ஆர்வலர் சிவாவை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக பொய்வழக்கை திரும்பப்பெற்று விடுதலை செய்ய வேண்டும், மேலும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஜக்கிவாசுதேவை கைது செய்ய வேண்டும் என உரையாற்றினர். முன்னதாக போராட்டத்திற்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...