பெரியதடாகம் பகுதியில் மயங்கிய பெண் யானை - வனத்துறையினர் தீவிர சிகிச்சை


மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான கோவை மாங்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியதடாகம், கரியாங்குட்டை அருகே காட்டு யானை ஒன்று படுத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறைமருத்துவர் மனோகரன் தலைமையில் ஆனைகட்டி கால்நடைத்துறை மருத்துவர் ஜெயந்தி  மற்றும்  வனத்துறையினர் அங்குசென்று பார்த்த போது சுமார் 30 வயதுமதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலகுறைவினால் சோர்வுடன் படுத்திருப்பதைகண்டனர். 

இதை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ள அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர். யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 5 யானைகள் கொண்ட கூட்டம் உள்ளதால் வனத்துறையினர் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு தான் குட்டி ஈன்றிருந்தாக கூறப்படுகிறது. 



கடந்த வாரம் மதுக்கரைவனப்பகுதியில் வளையன்குட்டை பகுதியில் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த  நிலையில் தற்போது மீண்டும் ஒரு யானை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது  வன உயிரினஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...