பெரியதடாகம் பகுதியில் மயங்கிய பெண் யானை - வனத்துறையினர் தீவிர சிகிச்சை


மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான கோவை மாங்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியதடாகம், கரியாங்குட்டை அருகே காட்டு யானை ஒன்று படுத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறைமருத்துவர் மனோகரன் தலைமையில் ஆனைகட்டி கால்நடைத்துறை மருத்துவர் ஜெயந்தி  மற்றும்  வனத்துறையினர் அங்குசென்று பார்த்த போது சுமார் 30 வயதுமதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலகுறைவினால் சோர்வுடன் படுத்திருப்பதைகண்டனர். 

இதை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ள அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர். யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 5 யானைகள் கொண்ட கூட்டம் உள்ளதால் வனத்துறையினர் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு தான் குட்டி ஈன்றிருந்தாக கூறப்படுகிறது. 



கடந்த வாரம் மதுக்கரைவனப்பகுதியில் வளையன்குட்டை பகுதியில் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த  நிலையில் தற்போது மீண்டும் ஒரு யானை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது  வன உயிரினஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...