சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கவில்லை-தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்



சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவான் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த போது தமிழக இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என ராகுல் அறிவுறுத்தியதாக தெரிவித்த அவர் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருடன் சுமூக உறவு உள்ளதாக தெரிவித்த அவர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது கருத்துக்கள் கூறி வருவதாகவும் அவர் அப்போது கூறினார். முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் 3 முறை வந்துள்ளது, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதை உணர்த்துவதாக தெரிவித்த அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடைபெற்ற போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதிக அளவில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் தமக்கு புதிய பதவி அறிவிக்கப்பட்டால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் இளங்கோவன் அப்போது தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...