லாட்டரி சீட்டுகளின் புழக்கத்தை தடுத்து நிறுத்துக- இளைஞர் பெருமன்றம் மனு



கோவையில் அதிகரித்துவரும் ஒரு எண் லாட்டரி சீட்டுகளின் புழக்கத்தை தடுத்து நிறுத்தி, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

''கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒரு எண் லாட்டரி சீட்டுகளின் புழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கபட்ட பொதுமக்கள் துடியலூர் மற்றும் மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து வாய்மொழியாக புகார் மனு அளித்தும் காவல் துறையோ மாவட்ட நிர்வாகமோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கோவை மாநகரில் பல பகுதிகளில் ஆன்லைன் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி தொழில் ஏகபோகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான குடும்பங்கள் அடிமையாகி வருமானத்தை முழுவதுமாக இதில் செலவு செய்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் கவணம் செலுத்தி லாட்டரி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

மேலும், துபாயில் இந்திய மீனவர்கள் வேலை செய்த நிறுவனங்களில் ஊதியம் வழங்காமல், அவர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு சம்பள பாக்கியை தராமல் விமான பயண சீட்டு மட்டும் கொடுத்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்நிறுவனங்களின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மனு அளித்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...