நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதிஅரேபிய அரச குடும் பத்தை சேர்ந்த இளவரசர் டர்கி பின் சவுத் அல்- கபிர்  இவரது நண்பர் அதெல் அல் மகிமித். இவரும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளவரசர் கபிர் தனது நண்பர்  மகிமித்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் அதே இடத்தில் பலியானார்.
மேலும் ஒருவர்  காயம் அடைந்தார்.  இச்சம்பவம் 2012-ம்  ஆண்டு டிசம்பரில் நடந்தது.

இந்த வழக்கு ரியாத் கோர்ட்டில்  நடந்தது. 2014-ம் ஆண்டில் இக் கொலை  வழக்கில் இளவரசர் கபிருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து  நேற்று அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவரை தொடர்ந்து இந்த ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் கபிர் 134-வது நபர் ஆவார். குறிப்பாக  சவுதி அரச குடும்பத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படு வது மிகவும் அபூர்வமாகும். 

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...