கல்லூரி அருகே கஞ்சா விற்றவர்கள் கைது

கோவை, ஈச்சனாரி மேம்பாலம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு செவ்வாயன்று தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கல்லூரியின் அருகில் சந்தேகத்திற்குறிய வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விற்பணைக்காக அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த அத்துல்லா என்பவரது மகன் அபுதாகிர் (30) என்பது  தெரியவந்தது. அவரிடம் இருந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கோவை சிட்கோவை அடுத்த பிள்ளையார்புர பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போத்தனூர் காவல் துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் அங்கு இருந்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த சேக் பரிதி என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கஞ்சா வைத்திருந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவை, போத்தனூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...