கோவையில் இரு கல்லூரி மாணவிகள் மாயம் - விசாரணை


கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம், பூச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மோனிசா (19). கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் திங்களன்று இரவு நீண்ட நேரமாகியும் விடுதிக்கு வராததால் விடுதிக் காப்பாளர் மோனிசாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கோவை வந்த கிருஷ்ணமூர்த்தி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றோரு சம்பவம்:

கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராஜேஸ்வரி (17) கோவையில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், திங்களன்று கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு 

சென்ற ராஜேஸ்வரி இரவு நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. 

இதனைத்தொடர்ந்து ஆறுமுகம், கல்லூரி மற்றும் அவரது தோழிகள் வீட்டில் ராஜேஸ்வரியை தேடியுள்ளார். எங்கும் அவர் கிடைக்காத நிலையில், ரத்தினபுரி காவல் நிலையத்தில் செவ்வாயன்று ஆறுமுகம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...