பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழா- சி.சி.எல் டி.20.


"எர்த் 2 மார்ஸ்" என்ற தனியார் நிறுவனம் தமிழக அளவில், கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது.

தமிழகம் முழுவதுமாக மொத்தம் 8 மண்டலங்களில் இருந்து 16 கல்லூரி அணிகள் 'சி.சி.எல். டி.20' விளையாட்டுப்போட்டியில் விளையாட உள்ளன. இதன் முதற்கட்டமாக, கோவை மண்டலத்தை சேர்ந்த 34 கல்லூரிகள் தங்கள் அணிகளை போட்டிக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இருந்து 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த தகுதிச்சுற்று போட்டி வரும் நவம்பர் மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளது.

கோவை மண்டலத்திற்கான போட்டிகள் பி.எஸ்.ஜி கலை கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி சாலையில் உள்ள ரேடியோ மெர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இதில், ரேடியோ மெர்ச்சி பண்பலையின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அஜித் கிருஷ்ணா, சிம்ப்ளிசிட்டி செயலியின் முதன்மை தலைமை அதிகாரி ஆண்ட்ரு சாம் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.





தொடந்து பி.எஸ்.ஜி. கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் இது குறித்து கூறுகையில், 'எங்கள் போன்ற மாணவர்களுக்கு, இது ஒரு சிறந்த அடித்தளம். இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளோம். கல்லூரியில் நடக்கும் தேர்வு பாதிக்காத வகையில் போட்டிகளை நடத்த உள்ளது மிகுந்த மகழ்ச்சியாக உள்ளது' என்றார்.



"சி.சி.எல். டி.20" போட்டியில் உங்கள் கல்லூரி கிரிக்கெட் அணியை இணைத்துக்கொள்ள: 9629441991 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...