"வாழ்க்கையை கொண்டாடுவோம்"- புற்றுநோயை வென்று வாழ்வோரின் நினைவுப் பயணம்


புற்றுநோய் என்ற சொல்லை பலரும் விரும்பாததன் காரணம் இந்த நோய் குறித்து இருக்கும் பயம் மற்றும் சந்தேகங்களே ஆகும். அனேகமாக இந்த நோயின் பக்கவிளைவுகள் மற்றும் நோயிலிருந்து மீண்டு வரும் விகிதம் குறைவாக இருப்பதும் கூட இதன் தொடர்புடையதாகும். ஆனால், நிறைய வகை புற்றுநோய்கள் ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக்கூடியவை என்ற உண்மையை அனைவரும் தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்று புற்றுநோய் எனப்படும் பயங்கரமான நோய்க்கு லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை முறை ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

வெற்றிகரமான விளைவுக்கு தேவையானது ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் கண்டறிவது, மன உறுதி, சிகிச்சை முடியும் வரை முழு ஒத்துழைப்பு ஆகும். 

இதுகுறித்தான நிகழ்ச்சி கோவை ஜெம் மருத்துவமனையின் சார்பில் ''வாழ்க்கையை கொண்டாடுவோம்''- புற்றுநோயை வெற்றிகரமாக ஜெயித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஒரு நினைவுப் பயனம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் பங்கேற்ற ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் சி.பழனிவேலு பேசுகையில், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை குறிப்பாக புற்றுநோயை லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை மூலம் குணப்படுத்தமுடியும் என்று தற்போதைய சிகிச்சை முறை பற்றி விளக்கினார். ஜெம் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்ட பல புற்றுநோய் சிகிச்சை முறைகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையாகும் என்பதையும் எடுத்துக்கூறினார்.



இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்டம் 3201-ன் மாவட்ட இயக்குநர் பிரகாஷ் அங்கப்பன், துணை ஆளுநர் வரதராஜன் மற்றும் கூடுதல் ஆளுநரும் பங்கேற்று உரையாற்றினர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...