சென்னை - கோவையில் நகை, பணம் பறிகொடுத்த நியூசி. பெண்

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் சிந்லீ ஸ்டாலின். நியூசிலாந்தில் ஆசிரியையாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை வந்த சிந்லீ ஸ்டாலின் சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளார். செவ்வாயன்று காலை 6.15 மணிக்கு ரயில் கோவைக்கு வந்ததையடுத்து தனது பையினை சிந்லீ சோதனையிட்டுள்ளார்.

அப்போது, அவர் கொண்டுவந்திருந்த ஒரு பை மட்டும் காணாமல்போயுள்ளது. மேலும், அதில், 20 சவரன் தங்க நகை, 60000 மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூபாய் 50000 இந்தியப் பணம் இருந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...