ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களின் கண்காட்சி

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் ஆண்டு சந்தை காட்சி படுத்துதல் என்ற கண்காட்சி நிகழ்ச்சி இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை, வணிகவியல் துறை இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். 
ஜி.ஆர்.டி கல்லூரி இயக்குநர் ராமச்சந்திரன் இந்நிகழ்வினை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில்: ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மாணவர்கள் சேர்ந்து அமைத்துள்ளனர். இந்த துறையில் உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணிகவியல் மேலாண்மை குறித்து 13 கூடங்கள் உருவாக்கி உள்ளனர். ஒவ்வொரு கூடங்களிலும் மேலாண்மை கருத்துக்கள் பற்றிய தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஒவ்வொரு தகவலும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. என அவர் தெரிவித்தார். 

மேலும், முதுநிலை வணிக துறை(எம்பிஏ) முதல் ஆண்டு மாணவர்கள் இணைந்து சில தனிப்பட்ட சுவைகளில் கல்லூரி மைதானத்தில் கடைகள் அமைத்தனர். இதில், அணித் தலைவர் சௌந்தரி, உணவு ஊக்குவிக்கும் கருத்துக்கள் பற்றி அவர் பேசுகையில்:- நம் உண்ணும் உணவிற்கு கவனம் கொள்ள வேண்டும். உணவு வீணாக்க வேண்டாம் மூன்றில் ஒரு பங்கு உணவு உலகம் முழுவதும் வீணாகி வருகிறது. உணவு வீணாகுவதை மக்களிடம் நாம் ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என அவர் கூறினார்.





Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...