ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கோரிக்கை

கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலசங்கம் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தி௫மண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கடந்த மாதம் 9-9-2016ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம், பட்டா மனைகளையும் அங்கிகாரம் பெறாமல் கட்டியுள்ள வீடு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளையும் இனிமேல் பதிவுசெய்ய இடைக்கால தடை உத்தரவு பிறபித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பேசும்பொழுது:- உயர்நீதிமன்றம் உத்தரவினால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி கிடப்பதுடன் இத்தொழிலை நம்பியுள்ள இலட்சக்கணக்கான முகவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு ஆண்டுக்கு 8ஆயிரத்து 500கோடி வ௫வாய் ஈட்டித் த௫வதும் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இடைக்கால தடை உத்தரவை நீக்கக்கோரி தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இதில், மேற்கு மண்டல தலைவர் நேரு நகர் நந்து மற்றும் ஒ௫ங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநில முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...