காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை- தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம் எனவும் இதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை எனவும் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவையில் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பன்மாநில நதிநீர் வழக்கு சட்டம் 1956 உட்பிரிவு 6 ன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் உட்பிரிவுகள் 6 ஏ (1) மற்றும் 6 (2)- யின்படி பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்கு அனுப்பப்படாமலேயே காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்கப்படலாம். இதற்கு முன்னுதாரணங்களாக நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் கிருஷ்ணா - கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியங்கள் பாராளுமன்ற ஒப்புதலின்றி அமைக்கப்பட்டுள்ளது ஆகும். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு. பி.ஏ.பி வாய்க்கால் திட்டத்தில் எழும் விவகாரங்களை இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்கப்பட்டு வருவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...