காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை- தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படலாம் எனவும் இதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற தேவையில்லை எனவும் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவையில் தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பன்மாநில நதிநீர் வழக்கு சட்டம் 1956 உட்பிரிவு 6 ன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் உட்பிரிவுகள் 6 ஏ (1) மற்றும் 6 (2)- யின்படி பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்கு அனுப்பப்படாமலேயே காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்கப்படலாம். இதற்கு முன்னுதாரணங்களாக நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் கிருஷ்ணா - கோதாவரி நதிகளின் மேலாண்மை வாரியங்கள் பாராளுமன்ற ஒப்புதலின்றி அமைக்கப்பட்டுள்ளது ஆகும். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு. பி.ஏ.பி வாய்க்கால் திட்டத்தில் எழும் விவகாரங்களை இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்கப்பட்டு வருவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...