வங்காளதேசத்தில் பயங்கரவாத தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வங்காளதேசத்தில் கடந்த 2005–ம் ஆண்டு மினிபஸ் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் இந்து மதத்தை சேர்ந்த ஜெகன்னாத் பரே என்பவர் உள்பட 2 நீதிபதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட வங்காளதேச ஜமாதுல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தலைவர் சயாக் அப்துர் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2007–ம் ஆண்டு மே 29–ந் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைவரான அசாதுல் இஸ்லாம் என்கிற ஆரிப் சம்பவத்தின் போது தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரும் 2007–ம் ஆண்டு ஜூலை 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கும் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து குல்னா சிறையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அசாதுல் இஸ்லாம் தூக்கில் இடப்பட்டார். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...