வங்காளதேசத்தில் பயங்கரவாத தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வங்காளதேசத்தில் கடந்த 2005–ம் ஆண்டு மினிபஸ் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் இந்து மதத்தை சேர்ந்த ஜெகன்னாத் பரே என்பவர் உள்பட 2 நீதிபதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட வங்காளதேச ஜமாதுல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தலைவர் சயாக் அப்துர் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2007–ம் ஆண்டு மே 29–ந் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைவரான அசாதுல் இஸ்லாம் என்கிற ஆரிப் சம்பவத்தின் போது தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரும் 2007–ம் ஆண்டு ஜூலை 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கும் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து குல்னா சிறையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அசாதுல் இஸ்லாம் தூக்கில் இடப்பட்டார். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...