டெங்குவை ஒழிக்க சுற்றுப்புரத் தூய்மை அவசியம்- மாநகராட்சி ஆணையர்


கோவை மாவட்டம், தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் கோவை மாநகராட்சி மற்றும் இந்து நாளிதழ் இணைந்து செவ்வாயன்று டெங்கு விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. இதில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் மாணவர்களிடையே பேசியதாவது:-



“கோவை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் டெங்கு விழிப்புணர்வை எடுத்துரைக்க வேண்டும். 

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. வீட்டின் அருகே தொட்டியில் சேமித்து வைத்துள்ள நீர், பழைய டயர்கள், தேனீர் கோப்பைகள், தேங்காய் ஓடு, உடைந்த பானை முதலியவற்றில் தேங்கும் நீரில் கொசு அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக உள்ளது. எனவே, நீர் தேங்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் உருவாகும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்” என பள்ளி மாணவர்களிடம் விளக்கிக் கூறினார்.



இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் மரு.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் (மத்திய மண்டலம்) மோகனசுந்தரி, பள்ளி செயலாளர் சிவராமன், பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஆர்.கே எர்கான் மேலாண்மை இயக்குநர் சிவசங்கர், இந்து நாளிதழின் உறுப்பினர் அமர்நாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...