தமிழகத்தில் 2வது நாளாக ரயில் மறியல் போராட்டம்!


சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனிடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக்திதல் 2வது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நேற்று திங்கள்கிழமை (அக்.17), இன்று செவ்வாய்க்கிழமை (அக்.18) ஆகிய இரண்டு நாள்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் நேற்று திங்கள்கிழமை (அக்.17) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (அக்.18) ரயில் மறியல் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து இன்று 2-வது நாளாக நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீஸார் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...