தமிழகத்தில் 2வது நாளாக ரயில் மறியல் போராட்டம்!


சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனிடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக்திதல் 2வது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நேற்று திங்கள்கிழமை (அக்.17), இன்று செவ்வாய்க்கிழமை (அக்.18) ஆகிய இரண்டு நாள்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் நேற்று திங்கள்கிழமை (அக்.17) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (அக்.18) ரயில் மறியல் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து இன்று 2-வது நாளாக நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீஸார் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...