ஒடிசா மருத்துவமனையில் தீயில் கருகி 23 பேர் பலி

புதுடெல்லி: புவனேஸ்வரில் சம் தனியார் மருத்துவமனை 4 அடுக்கு மாடியில் இயங்கி வருகிறது. மருத்துவமனை டயாலிசிஸ் பிரிவின் முதல் மாடியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நேற்று மாலை அங்கு திடீரென தீ பரவியது. டயாலிசிஸ் பிரிவுக்கு அடுத்து இருந்த அவசர சிகிச்சை பிரிவிலும் சில நிமிடங்களில் மளமளவென பரவிய தீயினால், ஏற்பட்ட கரும்புகை மற்றும் வெப்பத்தில் நோயாளிகள் சிக்கினர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று, தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டனர். அப்போது, தீயில் கருகிய நிலையில் 9 சடலங்களை மீட்புப்படையினர் மீட்டனர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் பினோத் குமார் மிஸ்ரா கூறுகையில், ''5 பேரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளோம்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்'', என்றார். இதனிடையே, சம் மருத்துவமனையில் இருந்து 37 பேர் தீக்காயங்களுடன் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர் என அம்ரி மருத்துவமனை டாக்டர் சலீல் குமார் மொஹந்தி தெரிவித்தார். மேலும், 8 பேர் மருத்துவமனை வரும்போது இறந்து காணப்பட்டனர் என அவர் கூறினார். 

போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொது மக்கள், தன்னார்வலர்கள் என பலரது ஆதரவுடன் 500 நோயாளிகளை நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தோம் என காவல் துறை கமிஷனர் தெரிவித்தார். கண்ணாடி ஜன்னலை உடைத்து நோயாளிகளில் பெரும்பாலானோரை மீட்டதாக கமிஷனர் கூறினார். இறுதி நேர நிலவரப்படி பலி எண்ணிக்கை 23 என கூறப்பட்டு உள்ளது. பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...