ஒடிசா மருத்துவமனையில் தீயில் கருகி 23 பேர் பலி

புதுடெல்லி: புவனேஸ்வரில் சம் தனியார் மருத்துவமனை 4 அடுக்கு மாடியில் இயங்கி வருகிறது. மருத்துவமனை டயாலிசிஸ் பிரிவின் முதல் மாடியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நேற்று மாலை அங்கு திடீரென தீ பரவியது. டயாலிசிஸ் பிரிவுக்கு அடுத்து இருந்த அவசர சிகிச்சை பிரிவிலும் சில நிமிடங்களில் மளமளவென பரவிய தீயினால், ஏற்பட்ட கரும்புகை மற்றும் வெப்பத்தில் நோயாளிகள் சிக்கினர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று, தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டனர். அப்போது, தீயில் கருகிய நிலையில் 9 சடலங்களை மீட்புப்படையினர் மீட்டனர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் பினோத் குமார் மிஸ்ரா கூறுகையில், ''5 பேரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளோம்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்'', என்றார். இதனிடையே, சம் மருத்துவமனையில் இருந்து 37 பேர் தீக்காயங்களுடன் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர் என அம்ரி மருத்துவமனை டாக்டர் சலீல் குமார் மொஹந்தி தெரிவித்தார். மேலும், 8 பேர் மருத்துவமனை வரும்போது இறந்து காணப்பட்டனர் என அவர் கூறினார். 

போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொது மக்கள், தன்னார்வலர்கள் என பலரது ஆதரவுடன் 500 நோயாளிகளை நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தோம் என காவல் துறை கமிஷனர் தெரிவித்தார். கண்ணாடி ஜன்னலை உடைத்து நோயாளிகளில் பெரும்பாலானோரை மீட்டதாக கமிஷனர் கூறினார். இறுதி நேர நிலவரப்படி பலி எண்ணிக்கை 23 என கூறப்பட்டு உள்ளது. பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...