தீபாவளியை முன்னிட்டு கோவையில் கூடுதல் அரசு பேருந்துகள் அறிமுகம்.


தீபாவளியை முன்னிட்டு கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் 

கழகத்தின் கோவை மாவட்ட பொது மேலாளர் கோவிந்தராஜன் நம்மிடம் கூறியதாவது:- 

''தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், கோவை கோட்டத்திற்கு மட்டும் 350 சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் அக். 26ம் தேதி முதல் தீபாவளி நாள் வரை இயங்கும். அதனைத் தொடர்ந்து, அக். 30 முதல் நவ. 2ம் தேதி வரை இயங்கும்.

இப்பேருந்துகள் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து உதகை, சேலம், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளன.

பொதுவாக அரசுப் பேருந்துகளில் கட்டணக் கொள்ளைகள் நடைபெறாது. அவ்வாறு ஏதேனும் கட்டணக் கொள்ளை குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறப்பு பேருந்துகளைத் தவிர்த்து மேலும் கூடுதல் பேருந்துகள் தேவை என்னும் பட்சத்தில் அதற்கும் பேருந்துகள் தயாராக உள்ளது'' என்றார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...