ஸ்ரீநகர் அருகே 2 கார்களுக்கு தீ வைப்பு

ஸ்ரீநகர் அருகே இன்று இரண்டு கார்களுக்கு முகமுடி அணிந்த மர்ம நபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45 மணியளவில் இரண்டு டாடா சுமோ கார்கள் ஆட்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விட்டு இரண்டு கார்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்து கொளுத்தினர்.

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பாரமுல்லாவில் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டை காலை 5 மணி முதல் தொடங்கியது. இதனால் பாரமுல்லாவின் பெரும்பகுதி பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு பதற்றங்களுக்கு இடையிலும் கடைசி ராணுவ முகாமான கமனைக் கடந்து கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து காரவன்-இ-அமான் அமைதிப் பேருந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீர் பகுதிக்குச் சென்றது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...