மாநகராட்சிப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் சுகாதாரமாக வாழ்வது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரியில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே சுத்தம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன் துவக்கி வைத்தார்.



தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா அறக்கட்டளை, கோவை ரோட்டரி கிளப், ஏஆர்சி பவுண்டேஸன் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஏஆர்சி பவுண்டேஸனின் சார்பில் அதன் உறுப்பினர்கள் மைம்ஸ் (அமைதியான) முறையில் சுகாதாரம் தொடர்பான நாடகம் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதனைத்தொடர்ந்து விஜயகார்த்திகேயன் பேசியதாவது:-

சுத்தம், சுகாதாரத்தின் அடிப்படை மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். சாப்பிடும் முன் கையினை சுத்தம் செய்வது, சுற்றுப்புரத்தை சுத்தமானதாக வைத்துக்கொள்வது போன்றவற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.



தூய்மை இந்தியா, தூய்மை வித்யாலயா-வின் கோவை மாவட்ட தலைவர் திருமாள் பேசியதாவது:-

திறந்த வெளி கழிப்பிடத்தினை தவிர்க்க வேண்டும். நமது சுற்றுப்புரத்தை நாம் தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். எங்கு நாம் இருக்கிறோமோ அங்கு சுகாதாரம் இருக்க வேண்டும். அடிப்படை சுகாதாரம் மாணவர்களிடையே இருப்பது அவசியம், மற்றவர்களுக்கும் இதுகுறித்து மாணவர்கள் தான் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சி 82 மாநகாட்சிப் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளதாக அவ்வமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.







Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...