நடனத்தின் ஈர்ப்பால் கல்லூரி மாணவர் தற்கொலை


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் (18). இவர் கோவை காலப்பட்டியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பிஎஸ்.சி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். நடனத்தின் மீது அளவுகடந்த ஆர்வம் இருந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காலில் பலத்த காயமடைந்த அவர் தொடர்ந்து நடனத்தில் ஈடுபட முடியவில்லை. 

இதனால் மனவேதனையில் காணப்பட்ட மோகன் ஞாயிறன்று இரவு அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த சக மாணவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சிங்காநல்லூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சகமாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அக்கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...