நடனத்தின் ஈர்ப்பால் கல்லூரி மாணவர் தற்கொலை


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் (18). இவர் கோவை காலப்பட்டியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பிஎஸ்.சி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். நடனத்தின் மீது அளவுகடந்த ஆர்வம் இருந்த இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காலில் பலத்த காயமடைந்த அவர் தொடர்ந்து நடனத்தில் ஈடுபட முடியவில்லை. 

இதனால் மனவேதனையில் காணப்பட்ட மோகன் ஞாயிறன்று இரவு அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த சக மாணவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சிங்காநல்லூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சகமாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அக்கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...