மத்திய அரசை கண்டித்து கோவையில் ரயில் மறியல் போராட்டம், 594 பேர் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று காலை கோவை ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாநகரில் மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 594 பேர் கைது. இதில் 45 பேர் பெண்கள் ஆவர்.  




தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது :- 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அதற்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல். மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 




தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினரை கைது செய்தனர்.



Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...