நான் அதிபராக தேர்வானால் இந்தியாவுடன் நெருங்கிய நட்பு

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள எடிசன் நகரில், குடியரசு கட்சியின் இந்து கூட்டணி ஏற்பாடு செய்த தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்டு பேசியதாவது: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதனால் அது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. நான் அதிபர் ஆனால், அமெரிக்காவும், இந்தியாவும் மிகச் சிறந்த நட்பு நாடுகளாக இருக்கும். இந்தியாவுடன் பல விதமான வர்த்தகத்தில் ஈடுபடவுள்ளோம். இதனால் இரு நாடுகளுக்கும் நல்ல எதிர்காலம் ஏற்படும்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை  பிரதமர் மோடி தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. உங்கள் பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவான தலைவர். அவர் வரிமுறையை எளிமை படுத்தியுள்ளார். வரியை குறைத்துள்ளார். பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீத அளவில் வலுவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது மிகப் சிறப்பானது. ஆனால் அமெரிக்காவில் நமது பொருளாதாரம் வளர்ச்சியடையவே இல்லை. ஜீரோவாக உள்ளது. ஆட்சி அதிகாரத்திலும் பிரதமர் மோடி நல்ல சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளார். இது அமெரிக்காவுக்கும் தேவை. அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மிகச் சிறந்த மனிதரான மோடியை, நான் பாராட்டுகிறேன்.

நான் இந்தியா மற்றும் இந்து மதத்தின் மிகச்சிறந்த ரசிகன். இந்துக்களும், இந்தியர்களும் அமெரிக்காவை வலுப்படுத்தினர். இங்குள்ள இந்திய சமூகத்தினர் பலர் தொழிலதிபர்களாக இருப்பது மிகவும் என்னை கவர்ந்துள்ளது. நான் அதிபரானால், இந்தியர்கள் மற்றும் இந்து சமூகத்தினருக்கு வெள்ளை மாளிகையுடன் நல்ல நட்பு ஏற்படும். இந்தியாவுடனான தூதரக மற்றும் ராணுவ ஒத்துழைப்பு இன்னும் வலுப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...