காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ரயில் மறியல் - ஸ்டாலின் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் அழைப்புவிடுத்திருந்தனர். இந்த மறியல் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். 

அதன்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டம் திங்களன்று (இன்று) தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சைதாப்பேட்டை தேரடி ரயில் நிலையத்திலும், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திலும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் ரயில் நிலையத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பெரம்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரெங்கநாதன் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினரை கைது செய்தனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...