'உடனடியாக தற்காலிக உரிமம் வழங்க வேண்டும்' - கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை

தீபாவளிக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதுவரை  பட்டாசு  கடை வைக்க  மாவட்ட நிர்வாகம் தற்காலி உரிமம் வழங்காத்தால்  பட்டாசு கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். 

கோவை மாவட்ட  பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள்  சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் பொது செயலாளர்,  தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு விற்பனைகள் நடைபெறும் , இதுபோன்று  பட்டாசு விற்னை செய்யும் கடைகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாகவே  தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆனால் தீபாவளிக்கு  இரண்டு வாரங்களே உள்ள நிலையிலும் பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக உரிமம் வழங்காமல் தாமதித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதானல் பட்டாசு கொள்முதல் செய்து சுமூகமாக வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தவர், உடனடியாக மாவட்ட நிர்வாகம்  தற்காலிக உரிமம் வழங்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வணிக வரித்துறையினர் நெருக்கடி இன்றி எளிய முறையில் வணிக வரி உரிமம் கிடைகக் வழி செய்ய வேண்டும் எனவும்  சீன பட்டாசுகளை தவிர்த்து தரமான பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாளை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். 

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...