'நான் கடந்து வந்த பாதையை சார்ந்து தான் என் படங்களும் இருக்கும்'- விருது வழங்கும் விழாவில் இயக்குனர் சமுத்திரக்கனி பேச்சு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமணமண்டபம் ஒன்றில்  மணிவண்ணன் விருது வழங்கும் விழா நடை பெற்றது. நாய் வால் என்ற திரைப்பட அமைப்பு ஒருங்கிணைத்த இவ்விழாவில் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்து கொண்டனர். சிறந்த திரைப்படத்திற்கான மணிவண்ணன் விருது 'அப்பா' திரைப் படத்திற்கு வழங்கப்பட்டது. இதை அப்படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி பெற்றுக்கொண்டார். தொடர்ம்து சிறந்த நாவலுக்கான விருது 'பார்த்தீனியம்' என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது. இதை அப்புத்தகத்தின் எழுத்தாளர் தமிழ் நதி பெற்றுக்கொண்டார். 



தொடர்ந்து, பார்த்தீனியம் நாவலின் எழுத்தாளர் தமிழ் நதி பேசியதாவது :- 

எனது நாவலை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த நாவலை 14 மாதங்கள் எழுதினேன். திருத்துவதற்கு 8 மாதங்கள் ஆனது. பலர் இந்த நாவலை குறித்து பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் நான் நாய் வால் போன்றவள். எழுத்து தான் என் வாழ்வின் ஆதாரம் அதை விட்டு நான் எங்கும் செல்லமாட்டேன்.

 இவ்வாறு அவர்  பேசினார்.  



இதைத் தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி பேசுகையில்:-

'நான் அப்பா திரைப்படத்திற்கு வாங்கும் முதல் விருது இது. மணிவண்ணன் ஒரு அருமையான மனிதர். அவரிடம் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்ட நான் இன்று அவர் பெயரிலே விருது வாங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு நண்பர்கள் அதிகம். அது தான் என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறது.   என்ன பிரச்சனை வந்தாலும், நான் இருக்கிறேன் என்று குழந்தைகளுக்கு தைரியம் கொடுங்கள். குழந்தைகள் தைரியசாலியாக உருவெடுப்பார்கள்.  

நான் கடந்து வந்த பாதையை சார்ந்து தான் என் படங்களும் இருக்கும்.  என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் அடிப்படையில் தான் அப்பா படத்தை உருவாக்கினேன்.  நம் சமூகத்தில் சாதி ஊறிப்போய்விட்டது. ஒருவரிடம் நான் நாம் 5 நிமிடம் பேசினால் , நம் சாதியை கேட்கத்தான்  வருகிறார்கள். இது மாற வேண்டும்.' என்றார். 



இவ்விழாவில் எழுத்தாளர் பாமரன், நடிகர் நமோ நாராயணன்,  மற்றும் 100க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்..



Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...