மதுராந்தகம் அருகே மர்ம காய்ச்சல் பரவுகிறது: சிறுவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓச்சேரி காலனியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில தினங்களாக அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். இன்று காலை இப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக இவர்கள் அனைவரும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஒச்சேரி பகுதி மக்கள் கூறியதாவது: ஓச்சேரி காலனியில் உள்ள 2 தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களையொட்டி கழிவுநீர் கால்வாய் செல்வதால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலையுள்ளது.

இதை குடித்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம். மதுராந்தகம் நகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகளும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்த கோவர்த்தனின் மகள் லதாஞ்சலி (16). இவர் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லதாஞ்சலி பரிதாபமாக இறந்தார். சென்னை பொழிச்சலூர் லட்சுமிநகர் கண்ணகி தெருவை சேர்ந்த முகமதுஇத்திரீஸ் என்பவரின் 2 குழந்தைகள் பாஹீமா (8), முகமது (4) ஆகியோரும் மதுரவாயல் ஆலப்பாக்கம் கார்த்திகேயன் நகரை சேர்ந்த ஆரோக்கிய சாமியின் மகள் லட்சிகா ஏஞ்சல் (6) ஆகியோரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...