அனைத்து தீவிரவாத குழுக்களையும் பாகிஸ்தான் தடை செய்ய வேண்டும்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. காஷ்மீர் வன்முறை குறித்து உலக நாடுகள் மத்தியில் பேச சென்ற பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கு, செப்டம்பர் 18ல் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.  நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டை உலக நாடுகள் ஏற்க மறுத்து விட்டன. குறிப்பாக அமெரிக்கா இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மீது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது. தற்போது மீண்டும் அதே கருத்தை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனடர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிரவாதிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் தீவிரவாத குழுக்களை அங்கீகரிக்காமல் தடை செய்ய வேண்டும். அதன் பின் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நிறுத்த வேண்டும். தீவிரவாத தாக்குதலால், பிரிவினைவாதிகளின் வன்முறையால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட தீவிரவாத குழுக்களிடம் இருந்து பாகிஸ்தானை காப்பாற்ற அமெரிக்கா உதவ தயாராக உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்ட குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பாதுகாப்பான இடமாக கருத இடம் கொடுக்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலம்தான் தற்போது எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க முடியும். தங்கள் மத்தியில் உள்ள பிரச்னைகளை சமரச முயற்சி மூலம் தான் தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...