அனைத்து தீவிரவாத குழுக்களையும் பாகிஸ்தான் தடை செய்ய வேண்டும்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. காஷ்மீர் வன்முறை குறித்து உலக நாடுகள் மத்தியில் பேச சென்ற பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கு, செப்டம்பர் 18ல் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.  நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டை உலக நாடுகள் ஏற்க மறுத்து விட்டன. குறிப்பாக அமெரிக்கா இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மீது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது. தற்போது மீண்டும் அதே கருத்தை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனடர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிரவாதிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் தீவிரவாத குழுக்களை அங்கீகரிக்காமல் தடை செய்ய வேண்டும். அதன் பின் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நிறுத்த வேண்டும். தீவிரவாத தாக்குதலால், பிரிவினைவாதிகளின் வன்முறையால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட தீவிரவாத குழுக்களிடம் இருந்து பாகிஸ்தானை காப்பாற்ற அமெரிக்கா உதவ தயாராக உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்ட குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பாதுகாப்பான இடமாக கருத இடம் கொடுக்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலம்தான் தற்போது எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க முடியும். தங்கள் மத்தியில் உள்ள பிரச்னைகளை சமரச முயற்சி மூலம் தான் தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...