'புட் பேங்க்' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம், ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டன



கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வத் தொண்டு அமைப்பு, இன்று உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, இன்று, அந்த அமைப்பைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.

இது குறித்து அந்த அமைப்பின் ஒரு ங்கிணைப்பாளர் வைஷ்ணவி கூறுகையில், 'எங்களது முக நூல் பக்கத்தில் 4800 பேர் எங்களை பின்  தொடர்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டி, மக்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்தோம். தொடர்ந்து இன்று ஏராளமானோர் அவர்கள் வீடுகளில் உணவு சமைத்தும், பிஸ்கட்டுகள், பழவகைகளையும்,  ஆதரவற்ற மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.



வ.உ.சி. பூங்கா தொடங்கி, ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, நஞ்சுண்டாபுரம், காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவுகள் விநியோகிக்கப்பட உள்ளது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இந்த உணவு நாளில், எங்கள் அமைப்பு முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.  இந்நிகழ்வில் பங்கேற்ற பொது மக்கள் பலர் ஆர்வத்துடன் தாங்கள் சமைத்த உணவுகளை வழங்கி, பசியுடன் இருப்பவர்களை மகிழ்வித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...