'எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்!

கலை கலாச்சாரம் வணிக தொடர்புகள் தொடர்பான எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் 50 பேர் பங்கேற்பு.

கோவை எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் அமைப்பு சார்பில் கலை கலாச்சாரம் வணிக தொடர்புகள் தொடர்பான எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 50 பேர் பங்கேற்றனர்.



இது குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருவதாகவும் 51 நாடுகளில் 12000 உறுப்பினர்களுடன் இயங்கி வருவதாகவும் கோவையில் இது துவங்கபட்டு 6வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதாக கூறினர். ஆஸ்திரேலியாவிலிருந்து 50 பேரும் இந்தியாவிலிருந்து 100கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழில் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்ச்சியில் ஜவுளி உற்பத்தி, வார்பட தொழில், உதிரி பாகங்கள் உற்பத்தி, உள்ளிட்டோரிடம் தொழில் அனுபவங்களை அறிந்து கொண்டதாக ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் தெரிவித்தனர்.

மேலும் வரும் காலங்களில் இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வணிகம் துவங்குவது குறித்த அனுபவங்களை பெற்றதாக கூறினர். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கருத்தரங்கி தொழில் மூலம் வளர்ச்சி கண்ட பத்மஸ்ரீ முருகானந்தம், சுகுணா நிறுவனர் சொளந்தராஜன், தைரோ கேர் டாக்டர். வேலுமணி இன்போசிஸ் நிறுவனர் ஷிபுலால் தங்களது வெற்றி பெற்று வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டது தங்களுக்கு மிகவும் பயணுள்ளதாக அமைந்த்தாக ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் தெரிவித்தனர்.

நேற்று உதகை சென்றவர்கள் அங்குள்ள படுகர் இன மக்களின் நடனம், கலை நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்ததாக தெரிவித்தவர்கள் கோவையில் ஜோதிடம், கேளிக்கை நிகழ்வு உள்ளூர் உணவு, சமையல் கலைகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் கோவை எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் உறுப்பினர்கள் அடுத்த ஆண்டு அஸ்திரேலியாவிற்கு வர அழைக்கபட்டுள்ளதாகவும் அங்கு உள்ள தொழில் வாய்புகள் குறித்து நம் நாட்வர் தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு என ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆங்கர் டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி ஜெயந்தரா ஜெயசந்திரன், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் இனை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் துரைசாமி, எஸ்.ஜே.பி மோட்டர் நிர்வாக இயக்குனர் சிவபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...