'எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்!

கலை கலாச்சாரம் வணிக தொடர்புகள் தொடர்பான எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் 50 பேர் பங்கேற்பு.

கோவை எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் அமைப்பு சார்பில் கலை கலாச்சாரம் வணிக தொடர்புகள் தொடர்பான எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 50 பேர் பங்கேற்றனர்.



இது குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருவதாகவும் 51 நாடுகளில் 12000 உறுப்பினர்களுடன் இயங்கி வருவதாகவும் கோவையில் இது துவங்கபட்டு 6வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதாக கூறினர். ஆஸ்திரேலியாவிலிருந்து 50 பேரும் இந்தியாவிலிருந்து 100கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழில் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்ச்சியில் ஜவுளி உற்பத்தி, வார்பட தொழில், உதிரி பாகங்கள் உற்பத்தி, உள்ளிட்டோரிடம் தொழில் அனுபவங்களை அறிந்து கொண்டதாக ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் தெரிவித்தனர்.

மேலும் வரும் காலங்களில் இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வணிகம் துவங்குவது குறித்த அனுபவங்களை பெற்றதாக கூறினர். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கருத்தரங்கி தொழில் மூலம் வளர்ச்சி கண்ட பத்மஸ்ரீ முருகானந்தம், சுகுணா நிறுவனர் சொளந்தராஜன், தைரோ கேர் டாக்டர். வேலுமணி இன்போசிஸ் நிறுவனர் ஷிபுலால் தங்களது வெற்றி பெற்று வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டது தங்களுக்கு மிகவும் பயணுள்ளதாக அமைந்த்தாக ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் தெரிவித்தனர்.

நேற்று உதகை சென்றவர்கள் அங்குள்ள படுகர் இன மக்களின் நடனம், கலை நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்ததாக தெரிவித்தவர்கள் கோவையில் ஜோதிடம், கேளிக்கை நிகழ்வு உள்ளூர் உணவு, சமையல் கலைகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் கோவை எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் உறுப்பினர்கள் அடுத்த ஆண்டு அஸ்திரேலியாவிற்கு வர அழைக்கபட்டுள்ளதாகவும் அங்கு உள்ள தொழில் வாய்புகள் குறித்து நம் நாட்வர் தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு என ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆங்கர் டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி ஜெயந்தரா ஜெயசந்திரன், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் இனை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் துரைசாமி, எஸ்.ஜே.பி மோட்டர் நிர்வாக இயக்குனர் சிவபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...