பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம்: பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி  பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.34 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.37 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வையடுத்து சென்னையில் ஒரு லிட்டர்  பெட்ரோல் ரூ.66க்கும், டீசல் ரூ.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம்,  மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே..வாசன் வலியுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில்  பெட்ரோல், டீல் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய கொள்கை முடிவை மத்திய அரசே எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...