"மைக்ரோகிரீன்ஸ்" என்னும் ஆரோக்கிய உணவு பற்றிய கருத்தரங்கு

கோயம்புத்தூர், அக்டோபர் 15 ம் தேதி சனிக்கிழமை அன்று ஆர்.எஸ் புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் மைக்ரோகிரீன்ஸ் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவையில் முதல் முறையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் டாக்டர்.ருச்சி வரவேற்றார்.  

பின்னர், இது குறித்து அவர் பேசுகையில்: மைக்ரோகிரீன்ஸ் என்பது ஒரு அதிசய உணவு, இது சக்தி வாய்ந்தது மற்றும் சுவையானது. மைக்ரோகிரீன்ஸ் உணவு என்பது நாம் அன்றாட சாப்பிடும் உணவில் உள்ளது. அதாவது, முளைப்பயிர் மற்றும் பல்வேறு தாவர வகைகளில் உள்ள உணவுப் பொருட்கள் சிறு வயதிலேயே அறுவடை செய்வது மூலமாக நமக்கு அதில் இருந்து 4 முதல் 40 மடங்கு வரை அதிக உயர் சத்துக்கள் கிடைக்கின்றன. இவ்வகை சத்துக்கள் பொதுவாக வளர்ந்த பெரிய தாவரங்களில் அதாவது; தக்காளி, கத்தரி போன்ற பல்வேறு பெரிய கனிகளில் இச்சத்துக்கள் கிடைப்பது இல்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சத்துப்பொருட்கள் புற்றுநோயை வராமலும் தடுக்கிறது. என அவர் பேசினார்.




இதனை சித்ரா கிருஷ்ணசாமி, அனு மற்றும் ஸ்வேதா கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...