முதல்வர் உடல்நலம் பற்றி பேசிய வழக்கில்- மக்கள் சிவில் உரிமை மனு

முதல்வர் உடல்நலம் பற்றி பேசியதாக கோவையில் சமீபத்தில் இரு வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களின் தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் என மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

முதல்வர் உடல்நலம் பற்றி அவதூறு பேசியதாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த இரு வங்கி உழியர்களான சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த கைது நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

பின்னர், மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ஆளும் கட்சியை திருப்திபடுத்தும் நோக்கில் காவல் துறையினர் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாகவும், இருவர் பேசியதற்காக கைது செய்யப்படுவது என்பது தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் செயல் எனவும், இந்த இருவர் கைது சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு இருவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் பாலமுருகன் வலியுறுத்தினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...