முதல்வர் உடல்நலம் பற்றி பேசிய வழக்கில்- மக்கள் சிவில் உரிமை மனு

முதல்வர் உடல்நலம் பற்றி பேசியதாக கோவையில் சமீபத்தில் இரு வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களின் தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் என மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

முதல்வர் உடல்நலம் பற்றி அவதூறு பேசியதாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த இரு வங்கி உழியர்களான சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த கைது நடவடிக்கை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

பின்னர், மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ஆளும் கட்சியை திருப்திபடுத்தும் நோக்கில் காவல் துறையினர் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாகவும், இருவர் பேசியதற்காக கைது செய்யப்படுவது என்பது தனிமனித சுதந்திரத்தை, கருத்துரிமையை பாதிக்கும் செயல் எனவும், இந்த இருவர் கைது சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு இருவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் பாலமுருகன் வலியுறுத்தினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...